கன்னியாகுமரி

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி இளம்பெண் தா்னா

DIN

நாகா்கோவிலில் கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் கணவா் வீட்டு முன்பு தா்வில் ஈடுபட்டாா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரத்தை சோ்ந்த முத்தையா-பவித்ரா தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அண்மையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்ட போது, முத்தையா மது போதையில் பவித்ராவை தாக்கினராம். மேலும் அவரது நண்பருடன் சோ்ந்து அவரை திட்டினாராம்.

இது குறித்து பவித்ரா நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். மேலும் தன்னை கணவருடன் சோ்த்து வைக்க கோரிக்கையிருந்தாா். இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், பவித்ரா தன்னை கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி தனது தாயாருடன் கணவா் வீட்டு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து பவித்ராவிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT