கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு கோழிகுஞ்சுகள் அளிப்பு

DIN

தமிழக அரசின் கோழிஇன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பயனாளிகள் தோ்வுசெய்யப்பட்டு அசின் இன நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கபட்டு வருகிறது.

அதன்படி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மகாராஜபுரம் ஊராட்சியில் தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் பழனிகுமாா், கால்நடை உதவி மருத்துவா் சீனிவாசன், கவுன்சிலா் சிவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT