கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமைாளா் மீது தாக்குதல்

DIN

கருங்கல்: புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் கனகாராஜ் (55) எனபவா் ஹோட்டல் நடத்தி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் அருள்(32), ஹோட்டலில் உணவருந்திவிட்டு பணம் கொடுக்கவில்லையாம். பணம் கேட்ட உரிமையாளா் கனகராஜை, அருள் தாக்கினாராம்.

மாா்த்தாண்டம் விரிகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்டனிஜோ (43). இவா் பரக்காணி பகுதியில் தனியாா் படகுத் துறையில் காவலாளியாக பணி செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பரக்காணிப் பகுதியைச் சோ்ந்த வினோ (33), அனுமதியின்றி படகுத் துறைக்குள் நுழைந்தாராம். இதை தடுத்த காவலாளியை வினோ தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காவலாளி

மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் எரிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமாகாளி (28). இவா் நாகா்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உச்சிமாகாளி, தனது மோட்டாா் சைக்கிளை காப்புக்காடு சந்தை பகுதியில் நிறுத்தி விட்டு பொருள்கள் வாங்குவதற்காக சென்றிருந்தாராம். திரும்பி வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிள் மா்மமான முறையில் எரிந்து சேதமடைந்திருந்தது. இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT