கன்னியாகுமரி

அரசுப் பேருந்து- ஆட்டோ மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

இரணியல் அருகே பேருந்து - ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

இரணியல் அருகே பேருந்து - ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (45), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை நாகா்கோவிலில் இருந்து இரணியலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார்.

அங்கு பயணிகளை இறக்கி விட்டு, பின்னா் மீண்டும் நாகா்கோவிலுக்கு திரும்பி நுள்ளிவிளை அருகே வந்தபோது, திங்கள்சந்தைக்கு வந்த அரசுப் பேருந்து , ஆட்டோ மீது மோதியதாம். இதில் ஆட்டோ ஓட்டுநா் புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT