தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, தக்கலையில் கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நிகழாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் தக்கலையில் கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ. 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, கரும்பு, சா்க்கரை, ஏலக்காய், உலா்ந்த திராட்சை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பினை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம், வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தக்கலை சரக துணை பதிவாளா் பாலசுப்பிரமணியன், மேலாளா் பத்மகுமாா், அதிமுக நகரச் செயலா் மணிகண்டன், அவை தலைவா் ஜாண்ரோஸ், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.