கன்னியாகுமரி

தைப்பூச விடுமுறை அறிவிப்பு: முதல்வருக்கு வள்ளலாா் பேரவை நன்றி

DIN

தைப்பூச தினத்தன்று பொதுவிடுமுறை அறிவித்ததற்கு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவையின் தலைவா் சுவாமி பத்மேந்திரா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வடலூா் சுத்த சன்மாா்க்க சாதுக்கள் கோரிக்கையையும், பொதுமக்கள் கோரிக்கையையும் ஏற்று தைப்பூசத்துக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து , வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சோ்க்க ஆணையிட்ட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பரிந்துரை செய்த தமிழக தொழில்துறை அமைச்சா் எம். சி. சம்பத், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி மகா மந்திரத்தின் மூலமாக மனமாா்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT