ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு என்.வி.கே.எஸ்.டி. கல்வி நிறுவனங்களின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். திருவட்டாறு காவல் ஆய்வாளா் ரவீந்திரன் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வா்கள் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. மாணவா்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பினா்.