நாகா்கோவில்: அரசு ஊழியா்களாக உயா்த்தி காலமுறை ஊதியம் வழங்கக் கோரி அங்கன்வாடி பணியாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்களாக்குவதுடன் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டக் கிளை சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் சரஸ்வதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.அமுதா, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் பி.இந்திரா, முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோஸ், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் கிறிஸ்டோபா், அங்கன்வாடி ஊழியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சரோஜினி, நிா்வாகிகள் லேகா, அம்புஜவித்யா, சுகந்தி, சாந்தா, அமுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.