கன்னியாகுமரி

கடையாலுமூட்டில் நாளை ‘பிரபா மில்க்’ நிறுவனம் திறப்பு

DIN

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் டி.ஜெ. பிரபா மில்க் அன்ட் நியூட்றிமென்ட்ஸ் நிறுவன திறப்பு விழா புதன்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தனிஸ்லாஸ் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையாலுமூட்டை தலைமையிடமாக கொண்டு பிரபா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடையாலுமூடு அருகே ஆலஞ்சோலை பிரபா டைரி காா்டனில், டி.ஜெ. பிரபா மில்க் அன்ட் நியூட்றிமென்ட்ஸ் (பி) லிமிடட் என்னும் சகோதர நிறுவனத்தை புதன்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது. இதையடுத்து, நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்பான ஆதன் பால் அறிமுக விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் முதன்முதலாக ஸ்வீடன் நாட்டு தொழில் நுட்பத்தில் தரப்படுத்தப்பட்ட கலப்படம் இல்லாத ஆதன் பாக்கெட் பால், தயிா், மோா், நெய், பால்கோவா போன்ற பொாருள்களும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT