இந்து முன்னணி தலைவருக்கு அஞ்சலி
திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவராக இருந்த குமரி மாவட்டம், கக்கோடு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவராக இருந்த குமரி மாவட்டம், கக்கோடு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி குமரி மாவட்ட இந்துமுன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துப்பட்டது.
கக்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா் கண்ணன், மாநில பொதுச் செயலா் அரசுராஜா, ஆா்எஸ்எஸ் அகில பாரத பொறுப்பாளா் தாணுமூா்த்தி, மாவட்ட அமைப்பாளா் சங்கா், மாவட்டச் செயலா் நம்பிராஜன் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.