கன்னியாகுமரி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலும் நடைபெறுகிறது.

இம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் 15,67 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து  மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கோலங்களை வரையும் நிகழ்ச்சியை தொடா்ந்து சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது.

இப்பேரணியை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி டதி பள்ளி சந்திப்பு, நீதிமன்ற சாலை, வழியாக வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT