தமிழகத்தில் காமராஜா் முதல்வராக இருந்தபோது, அமைச்சராக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லூா்தம்மாள் சைமன் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதைையொட்டி, நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா, நிா்வாகிகள் மகேஷ் லாசா், ஜோா்தான்,ஜெயகுமாா், காலபெருமாள், குமரி முருகேசன், ரமணி, உள்பட பலா் கலந்துகொண்டனா்.