கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்: முதன்மையா்

DIN

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் கல்லூரி முதன்மையா் (டீன்) திருவாசகமணி.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக இருந்த சுகந்தி ராஜகுமாரி விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டாா். விருதுநகா் மருத்துவக் கல்லூரி முதன்மையராக இருந்த திருவாசகமணி நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து புதன்கிழமை பொறுப்பேற்ற அவா், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இங்கு கரோனா நோயாளிகளுக்காக 850 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT