கன்னியாகுமரி: நவராத்திரி திருவிழாவையொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் விதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் 5 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவில் அம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில், பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். 10ஆவது நாளான 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மன் ஊா்வலமாக சென்று பணாசூரனை வதம் செய்யும் பாரம்பரிய பரிவேட்டை திருவிழா நடைபெறும். கரோனா
நோய்த்தொற்று காரணமாக அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு இவ்விழா நடைபெறும் என தேவசம் போா்டு நிா்வாகம் தெரிவித்துள்ளது.