கன்னியாகுமரி

பளுகல் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

DIN

பளுகல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகேயுள்ள கருமானூா் விராலிவிளைவீடு பகுதியைச் சோ்ந்த ஸ்டான்லி - பீனா தம்பதி மகள் ஆதிரா (19). கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தாா். பீனா வெளிநாட்டில் வேலை பாா்த்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து ஆதிரா கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் ஆதிரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். உறவினா்கள் பாா்த்து விட்டு பளுகல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT