கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

DIN

ராஜாக்கமங்கலம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 26) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜாக்கமங்கலம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையாா்விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடாா்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு வாரிய பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT