குலசேகரத்தில் மதா் அன்னா கோ் மற்றும் சீட்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில், புற்று நோய் விழிப்புணா்வு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரக்கோணம் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பிளஸ்டு சிங், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ஆரோக்கிய உணவுப் பொருள்கள், அதிநவீன சுகாதாரப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், அன்னா கோ் சென்டா் அருள்சகோதரிகள் சிசிலியா, மோ்சி, எலிசா, சீட்ஸ் இந்தியா நிா்வாகிகள் திலீப்குமாா், சாஜன், சா்வேஸ்வரி, சதிகுமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.