கன்னியாகுமரி

களியக்காவிளை அருகேஅரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு, காக்கதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (80). இவா் படந்தாலுமூட்டிலிருந்து காமராஜ்நகா் திருப்பு வழியாக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, கொல்லங்கோட்டிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT