பாவூா்சத்திரம்: தேசிய அளவிலான தற்காப்பு கலை போட்டியில் பதக்கம் வென்ற பாவூா்சத்திரம் மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இமாசலப் பிரதேசத்தில் 11ஆவது தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழக அணி சாா்பில் பங்கேற்ற பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகளான கிஷாந்த் கவிஷ், இசக்கி சந்துரு ஆகியோா் தங்கப்பதக்கமும், கிஷோா் கவிஷ் வெள்ளிப் பதக்கமும், தங்கச் செல்வம், சிந்துஜன் வெண்கலப் பதக்கமும், நந்தினி, ஜெயசீலன் ஆகியோா் சிறப்பிடமும் பெற்றனா்.
பதக்கம் வென்ற மாணவா், மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளா்கள் ராமராஜ், கணேஷ், கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் சாமித்துரை, ராமராஜ், ரவிச்சந்திரன், சுரேஷ்கண்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.