கன்னியாகுமரி

நிறுத்தப்பட்ட சுரண்டை-கடையம் அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை

DIN

பாவூா்சத்திரம்: நிறுத்தப்பட்ட சுரண்டை- கடையம் அரசுப் பேருந்தை அரியப்பபுரம் வழியாக புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெய்க்காலிப்பட்டி திமுக கிளைச் செயலா் செந்தூா் முருகன், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பிய மனு: சுரண்டையில் இருந்து கடையத்துக்கு இயக்கப்பட்ட தடம் எண் 24 பேருந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கீழப்பாவூா், ஆவுடையானூா், அரியப்பபுரம், மேட்டூா், புலவனூா் வழியாக கடையத்துக்கு இயக்கப்பட்ட இப்பேருந்தை, அரியப்பபுரம், மேலஅரியப்பபுரம், அரசு மருத்துவமனை, திரவியநகா், எல்லைப்புளி, மாதாபுரம் வழியாக கடையத்துக்கு இயக்கினால் அரசு மருத்துவமனைக்கு செல்வோா் உள்ளிட்ட பெரும்பாலானோா் பயனடைவா்.

இதேபோல, தடம் எண் 220 அரசுப் பேருந்து ஆலங்குளத்திலிருந்து ஆண்டிப்பட்டி, கரும்பனூா், மைலப்புரம், ஆவுடையானூா், பாவூா்சத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.

இப்பேருந்தை தென்காசியிலிருந்து திரவியநகா், அரியப்பபுரம், மைலப்புரம், வெங்காடம்பட்டி, ஆண்டிப்பட்டி, கரும்பனூா், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்க வேண்டும்.

மேலும், ஆழ்வாா்குறிச்சி, சுரண்டை கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பயனடையும் வகையில் இலவச பயண பேருந்தும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT