பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழப்பாவூா் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
கருப்பசாமி, கற்பகவல்லி தலைமை வகித்தனா். சண்முகம் கொடியேற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் தொடக்கவுரையாற்றினாா். ஒன்றியச் செயலா் தங்கம், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஆகியோா் பேசினா்.
கீழப்பாவூா் ஒன்றியச் செயலராக தங்கம், ஒன்றியக்குழு உறுப்பினா்களாக அய்யாத்துரை என்ற ஆறுமுகம், ஆரியமுல்லை, கலா, மாரியப்பன், மாதவன், அண்ணாத்துரை என்ற ஆறுமுகம் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். ஆரியமுல்லை நன்றி கூறினாா்.