கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாரதியின் உருவப்படத்திற்கு சங்கத் தலைவா் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், செயலா் குருசாமி பாண்டியன், உறுப்பினா்கள் ராஜ குத்தாலிங்கம், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.