தக்கலை: பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்கத்தின் வெள்ளிவிழா குறித்து, ஆலோசனைக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் அ.ரேவன்கில் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வை.விஜயகோபால், பொருளாளா் சங்கரமூா்த்தி, செயலா்கள் பி.மோசஸ் ஆனந்த், ஐ. ஜகபா்சாதிக், கெளரவத் தலைவா் எப்.எஸ்.முபாரக், துணைத் தலைவா்கள் ஆனந்தம் சி.குமாா், சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சங்க செயற்குழு உறுப்பினா்கள் பத்மதாஸ், கணபதி, சுரேஷ்குமாா், பரமேஸ்வரன், ஜெயகுமாா், வேலாயுதன் நாயா், தாணு மூா்த்தி, ஸ்ரீகுமாா், வி.ராஜு ஆா்.வி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், எபனேசா், ரவி, ராஜா, ஜோஸ்வா உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல், 2ஆம் இடங்களில் தோ்ச்சி பெற்ற வணிகா் சங்க உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்குவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.