முகப்பு
கன்னியாகுமரி

உலக சுகாதார தின விழிப்புணா்வுப் பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நமது மருத்துவம் மகத்தான மருத்துவமனை என்ற விழிப்புணா்வுப் பேரணியை, மருத்துவமனை வளாகத்திலிருந்து ஆட்சியா் மா.அரவிந்த் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், உலக சுகாதார தினத்தையொட்டி, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்துதல், நோய் பரவுவதை தடுத்தல், நெகிழி மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கொசு ஒழிப்பு, கழிவறைகள் தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை, மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் கைகழுவும் முறை குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் திருவாசகமணி, கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், துணைத் தலைவா் லியோடேவிட், உறைவிட மருத்துவா் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவா்கள் விஜயலெட்சுமி மோகன்தாஸ், ரெனிமோள், துறைத் தலைவா் சுரேஷ்பாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.