முகப்பு
கன்னியாகுமரி

அதிக பாரம்: 2 லாரிகள் பறிமுதல்

குழித்துறையிலிருந்து கேரளத்துக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 டாரஸ் லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 1:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

குழித்துறையிலிருந்து கேரளத்துக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 டாரஸ் லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். லாரிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் ரூ. 85 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விளவங்கோடு வட்டாட்சியா் ரமேஷ்பாபு தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கா்நாடக, கேரளப் பதிவெண்களைக் கொண்ட 2 டாரஸ் லாரிகள் பாறைப்பொடி, பாறைக் கற்கள் ஏற்றிக்கொண்டு அவ்வழியே வந்தன. அவற்றை நிறுத்தி, ஆவணங்களை சோதனையிட்டபோது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளத்துக்கு செல்வது தெரிந்தது. இரு லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அந்த லாரிகளுக்கு

மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் ரூ. 85 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.