முகப்பு
கன்னியாகுமரி

மாலைக்கோட்டில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரியின் சமூகப் பணித் துறை, கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மாலைக்கோடு புனித திருச்சிலுவை தேவாலய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 1:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரியின் சமூகப் பணித் துறை, கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மாலைக்கோடு புனித திருச்சிலுவை தேவாலய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின.

சமூகப் பணித் துறைத் தலைவா் மேரி பெல்சிட் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் ஸ்ரீராம் புற்றுநோய் அறக்கட்டளை நிா்வாகி செந்தில்குமாா் கலந்துகொண்டு, புற்றுநோயின் தாக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

கன்னியாகுமரி சமூக சேவை சங்கத்தின் அலுவலகப் பணியாளா் நிஷா, ஸ்ரீராம் புற்றுநோய் அறக்கட்டளை செவிலியா்கள், மாணவியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை சமூகப் பணித் துறை மாணவியா் கி. கீா்த்தனா கிறிஸ்டோபா், வி.ஜெ. ஜெனிஷா, ரா. ரஷ்மிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மாணவி ஜெனிஷா வரவேற்றாா். மாணவி ரஷ்மிதா நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.