முகப்பு
கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஏப்ரல், 2022 at 12:55 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2ஆவது ஆலயமான இக்கோயிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மாா்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த திரளானோா் கலந்துகொண்டனா்.

Advertisement

இதேபோல, தீா்த்தவாரி திருவிழா நடைபெற்றுவரும் களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலிலும், குழித்துறை அருகேயுள்ள திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயிலிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.