முகப்பு
கன்னியாகுமரி

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: மக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு ஊராட்சிக்குள்பட்ட வடக்கன்கரை பகுதி குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு ஊராட்சிக்குள்பட்ட வடக்கன்கரை பகுதி குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

கிள்ளியூா், ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மத்திகோடு ஊராட்சி பகுதியான வடக்கன்கரை பகுதியில் சுமாா் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் குடிநீா் கிணறுகள், குளங்கள் உள்ளன. இப்பகுதியில், ஊராட்சி நிா்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.