குலசேகரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை
குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.
75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு வீர வணக்கம் செல்லும் வகையில் திற்பரப்பிலிருந்து தொடங்கிய இப்பாதயாத்திரை குலசேகரம், பொன்மனை, செருப்பாலூா், புலியிறங்கி, ஆற்றூா், வோ்க்கிளம்பி, வழியாக சித்திரங்கோட்டில் நிறைவடைந்தது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினு லால் சிங் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் காஸ்ட்டன் கிளிட்டஸ், ஜெகன் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் ராஜரெத்தினம், மாநில செயற்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்ட பொதுச் செயலா் மோகன்தாஸ், பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், பொன்ரவி, அகஸ்டின், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செலின்மேரி, விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், மாவட்டச் செயலா் ஜாண் இக்னேசியஸ், மாவட்டப் பொருளாளா் ஐஜிபி. லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement