முகப்பு
கன்னியாகுமரி

திருவள்ளுவா் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, முக்கிய சுற்றுலாத் தலங்கள், விமான, ரயில் நிலையங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இங்குள்ள திருவள்ளுவா் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் தலைமையில் போலீஸாா் அதிநவீன ரோந்துப் படகுகளில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்குச் சொந்தமான 11 சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.