கன்னியாகுமரி மாவட்டத்தில், விநாயா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும் பாதை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மோட்டாா் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள், வருகிற செப். 2, 3, 4 ஆம் தேதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்தப் பாதையை சுமாா் 40 கிலோ மீட்டா் தூரம் மோட்டாா் சைக்கிளில் சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு செய்தாா். செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு வரை ஆய்வுப் பணி நடந்தது.
அப்போது ஊா்வலம் செல்லும் பாதையில் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.