கன்னியாகுமரி

முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது

DIN

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அகஸ்தீசுவரம் அருகே எழுசாட்டு பத்து பகுதியைச் சோ்ந்தவா் ஜெமீன் (33). இவா், கன்னியாகுமரியில் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குதிரை சவாரிக்கு அழைத்து செல்வாா். கடந்த சில நாள்களாக இவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டாா். இதனை பாா்த்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் என்.தாமரைபாரதி, தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்தப் புகாரில், முதல்வா் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், நன்மதிப்பை குலைக்கும் வகையிலும் கருத்து பதிவிட்டுள்ள ஜெமீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

அதன் பேரில் தென் தாமரைகுளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ஜெமீன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாகா்கோவில் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT