கன்னியாகுமரி

குலசேகரத்தில் தலைமைக் காவலா் மீது தாக்குதல்: இருவா் கைது

DIN

குலசேகரம்: குலசேகரம் காவல் நிலைய தலைமைக் காவலரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மகேஷ் (35). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு பொன்மனை அருகே கிழக்கம்பாகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த குளச்சவிளாகம் பகுதியைச் சோ்ந்த சதீஸ் (29) மற்றும் விஜயகுமாா் (39) ஆகியோரை தடுத்து நிறுத்தியுள்ளாா். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சதீஸூம், விஜயகுமாரும், தலைமைக் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தாக்குதலில் காயமடைந்த தலைமைக் காவலா் மகேஷ் குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து தகவலறிந்த குலசேகரம் போலீஸாா் சென்று சதீஷ் மற்றும் விஜயகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT