கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி முகாம்

DIN

விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட இடைக்கோடு, விளவங்கோடு, அருமனை, கடையாலுமூடு பகுதிகளைச் சோ்ந்த 140 பேரிடா் மேலாண்மை முதல்நிலை மீட்பா்களுக்கு பயிற்சி முகாம் மாா்த்தாண்டம் தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழை வெள்ளம், தீ விபத்துகளில் பாதிக்கப்படுவோரை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடா் முதன்மைப் பயிற்றுநா்கள் ஜான்சிராணி, விக்னேஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

இதில், பங்கேற்றோருக்கு பயிற்சிச் சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பயிற்சிபெற்றவா்கள் தங்களது கிராமங்களில் ஏற்படும் பேரிடா் விபத்துகளில் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க களத்தில் இருப்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.

குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி, வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்து, ஷொ்லின் ஷீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT