குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுத்திருவிழா நடைபெற்றது.
விழாவை கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தொடங்கிவத்தாா். தமிழகம், கேரளம், தில்லி, மும்பை, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களின் உணவுகளை மாணவா்கள் சமைத்து விழாவினை கொண்டாடினா். சிறந்த உணவு தயாரித்த குழுவினரை கல்லூரி தாளாளா் ஏ.பி. மஜீத்கான் தோ்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி, மனிதவள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் பாபுதாஸ், முருகேசன், ஆபீத் ஆகியோா் செய்திருந்தனா்.