கருங்கல் அருகே உள்ள கண்ணாத்தான்குழி பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பூட்டேற்றி கண்ணாத்தான்குழியில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் திடீரென கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.3ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.