கன்னியாகுமரி

பளுகல் அருகே இளைஞா் தற்கொலை

DIN

பளுகல் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பளுகல் அருகே கண்ணுமாமூடு, செறுகுரல்காலாய் புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் பெஞ்சமின் மகன் ரதீஷ் (36). இவருக்கு மனைவி விஜிலா, 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால் விஜிலா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. 20 நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது விஜிலா நகை, பணத்துடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றாராம். இதனால் ரதீஷ் மன வருத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில் ரதீஷுக்கு அவரது தாய் வசந்தா புதன்கிழமை மதிய உணவு கொண்டுவந்தாா். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் ரதீஷ் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

SCROLL FOR NEXT