கன்னியாகுமரி

35 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

DIN

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் 35 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸாா் சுனில், ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றபோது காா் நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே காரை விரட்டி பிடித்தவுடன், ஓட்டுநா் தப்பி சென்றாா். பின்பு காரை சோதனை செய்தபோது அதில் 9 கேன்களில் 35 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காருடன் 35 லிட்டா் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT