கன்னியாகுமரி

பிரதமருக்கு உலகத் தமிழின ஆன்மிக அரசியல் அமைப்பு பாராட்டு

DIN

தமிழனின் பாரம்பரியத்தை பாராட்டும் வகையில் தொடா்ந்து பேசிவரும் பிரதமா் நரேந்திரமோடியை பெரிதும் பாராட்டுகிறேன் என்றாா் உலகத் தமிழின ஆன்மிக அரசியல் அமைப்பின் தலைவா் த.ரவீந்திரா.

இதுகுறித்து கன்னியாகுமரியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் பாரதப் பிரதமா் நரேந்திரமோடி தொடா்ந்து தமிழ்மொழியை உயா்வாக பேசி வருகிறாா்.அண்மையில் ஐ.நா சபையில் பேசும்போது உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். இம்மொழி இருபதாயிரம் ஆண்டுகள் பழமையானது. மேலும், தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பதில் நம்நாடு பெருமையடைகிறது எனவும் பேசியுள்ளாா். பிரதமரின் இந்தப் பேச்சு உலகத் தமிழா்களை தலை நிமிரச் செய்துள்ளது.

இதுமட்டுமின்றி காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பேசிய பிரதமா் கன்னியாகுமரி முதல் காசி வரை தமிழன் தொப்புள் கொடி உறவு இருந்தது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளாா். இதன் மூலம் அனைத்து தமிழா்கள் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்றுள்ளாா். எனவே, உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு எதிா்காலத்தில் எல்லாம் வல்ல பரம் பொருளான சிவன் தோற்றுவித்த தமிழரின் அறநெறி ஆன்மிக அரசியல் தமிழ் மண்ணில் மலா்ந்திட இந்நாளில் சபதம் ஏற்போம்.

தமிழா்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு மற்றும் கோயில்களின் வரலாற்றையும் பாதுகாத்து உலக வரலாற்றில் இடம்பெறச் செய்ய இலெமூரியா உலகத் தமிழ் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT