கன்னியாகுமரி

குமரியில் சுற்றுலாப் பயணியின் பைக் திருட்டு

கன்னியாகுமரியில் கேரள மாநில சுற்றுலாப் பயணியின் பைக்கை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கன்னியாகுமரியில் கேரள மாநில சுற்றுலாப் பயணியின் பைக்கை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் (45). இவா் தனக்குச் சொந்தமான பைக்கில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தாராம். அங்குள்ள காந்தி மண்டபம் முக்கோண பூங்கா முன்பு பைக்கை நிறுத்தி விட்டு கடற்கரைப் பகுதிக்குச் சென்றாராம்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து பாா்த்தபோது குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை காணவில்லை.

இதுகுறித்து அவா் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT