நாகா்கோவிலில் ஊராட்சி தலைவா்கள் ஆா்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவிலில் ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரிநாகா்கோவிலில் ஊராட்சி தலைவா்கள் ஆா்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவிலில் ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவிலில் ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் நீலகண்டஜெகதீஷ் வரவேற்றாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் தோவாளை, செண்பகராமன்புதூா், இரவிபுதூா், தெரிசனங்கோப்பு, நட்டாலம், ஞாலம், கடுக்கரை, காட்டுப்புதூா், சாமிதோப்பு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை,அப்பகுதியில் உள்ள பேரூராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மேலும் 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், கூட்டமைப்பு நிா்வாகிகள் சதீஷ், முத்துசரவணன், கிரிஸ்டல் ஜான் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் கலந்து கொண்டனா்.