கடையநல்லூா் பள்ளியில் குடியரசு தின விழா
கடையநல்லூா் முத்துக்கிருஷ்ணாபுரம் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கடையநல்லூா் முத்துக்கிருஷ்ணாபுரம் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தங்கம் வரவேற்றாா். கடையநல்லூா் ஜெய்சிவன் ஆா்மி அகாதெமியின் நிறுவனரும் ராணுவ அதிகாரியுமான சிவன்மாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா்.
ரத்னா உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் செயலா் மாடசாமி, தலைமையாசிரியா் சக்திவடிவு, உதவித் தலைமையாசிரியா்கள் பகவதிசுப்பிரமணியன், பிரபாகரன், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement