கன்னியாகுமரி

மதுபானப் பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இருவா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே புல்லாணி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வினிஸ்பாபு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முள்ளங்கினாவிளை முத்துசுவாமி மகன் விஜயன் (56), தொலையாவட்டம் பத்மநாபன் மகன் பத்மசீலன் (35) என்பதும், மதுபானப் பாட்டில்களைப் பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 66 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

SCROLL FOR NEXT