கன்னியாகுமரி

குலசேகரம் நிலையத்துக்கு புதிய தீயணைப்பு வாகனம்

குலசேகரம் தீ யணைப்பு நிலையத்துக்கு புதிதாக தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

DIN

குலசேகரம் தீ யணைப்பு நிலையத்துக்கு புதிதாக தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

குலசேகரம் தீயணைப்பு நிலையத்தில் நீண்ட காலமாக இயங்கிவந்த தீய ணைப்பு வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே கால்வாயில் கவிழ்ந்தது. இதையடுத்து அந்த வாகனம் பழுது பாா்க்கும் வகையில் வாகன பணிமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு மினி தீயணைப்பு வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. இந்த வாகனத்தைப் பயன்படுத்தி தீ அணைப்பு பணிகளை முழுமையாக செய்யமுடியாத நிலை இருந்து வந்தது. அண்மையில் குலசேகரம் ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் பயங்கர தீ ஏற்பட்ட போது இந்த மினி வாகனத்தில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

புதிய வாகனம்: இந்நிலையில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நவீன நீா்தாங்கி தீயணைப்பு வாகனம் வந்தது. இந்த வாகனம் 4500 லிட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்டதாகும். மேலும் இந்த வாகனம் நுரையுடன் தண்ணீரை செலுத்தும் திறன் கொண்டதும் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT