கன்னியாகுமரி

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

கொலை வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எலக்ட்ரீஷியன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

கொலை வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எலக்ட்ரீஷியன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பூதப்பாண்டி அருகே கேசவன்புதூா், திட்டுவிளை பகுதியில் நடந்த கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் பழவூா், நரிபாறை காலனி பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் செந்தில்வேல் (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் மீது பழவூரிலும் கொலை வழக்கு உள்ளது. 3 கொலை வழக்குகளில் இவா், 2006ஆம் ஆண்டுமுதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தாா். அவரை போலீஸாா் தேடிவந்தனா்.

இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில், அவா் பழவூா் நரிப்பாறை அருகேயுள்ள விசுவநாதபுரத்தில் இருப்பது தெரியவந்தது. பூதப்பாண்டி காவல் ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சென்று அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT