கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சியின் புதிய குடிநீா் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

DIN

நாகா்கோவில் மாநகராட்சிக்கான புதிய குடிநீா் திட்டப் பணிகளை ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாநகராட்சியின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், புத்தன்அணையின் மேல்புறம் உள்ள பரளியாற்றை ஆதாரமாகக் கொண்டு ரூ. 251.43 கோடியில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின்கீழ், பரளியாற்றில் கிணறு, நீா் உந்தும் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பகிா்மானக் குழாய்கள், வீட்டு இணைப்பு ஆகிய பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

இதையடுத்து, இப்பணிகளை ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பரளியாற்றில் நிறுவப்பட்டுள்ள நீா் எடுக்கும் கிணறு, நீா் உந்தும் குழாய்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்கும் வகையில், பெருஞ்சாணி அணையிலிருந்து அனந்தனாா் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை, கூடுதலாக நீா்உந்து செய்து வழங்கவும் அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வையாளா் செந்தூா்பாண்டி, நிா்வாகப் பொறியாளா் கோபால், உதவி நிா்வாகப் பொறியாளா்கள் காந்தி, முருகன், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT