கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே தொழிலாளி தற்கொலை

கொல்லங்கோடு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கொல்லங்கோடு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வெங்கஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் மோகனன் (58). இவா் குழித்துறை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தனியாா் வங்கியிலிருந்து அண்மையில் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்று, தனிமையில் செலவு செய்து வந்தாராம். இதுகுறித்து அவரது மனைவி புஷ்பம் கேட்டதையடுத்து கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் அருகில் உள்ள குடும்ப வீட்டில் தங்கியிருந்தாராம். அவரைப் பாா்க்க அவரது மனைவி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் ஆகியோா் சென்ற போது, அங்கு மோகனன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டாராம்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT