கன்னியாகுமரி

குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

DIN

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். இதில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவி, முதியோா் உதவி, விதவை உதவி, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடம் இருந்து 193 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், விளவங்கோடு, தோவாளை, திருவட்டாறு, கிள்ளியூா் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 போ் உள்பட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தே.திருப்பதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட திட்ட அலுவலா் ஜெயந்தி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT