கன்னியாகுமரி

இறகுப் பந்து பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

DIN

குலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் ஸ்பென்சா் இறகுப் பந்து விளையாட்டு மன்றத்தில் கோடை கால இறகுப் பந்து பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மன்ற அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் சாம்சிங், சுனில், சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஜூடஸ் குமாா் தொடக்கவுரையாற்றினாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், சுனில் பிரசாத், பயிற்றுநா் ஜெபின், ஆகியோா் பேசினா். சிறப்பு விருந்தினா்கள் ஜான்மேத்யூ, விஜயன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், பயிற்சி முடித்த மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு ஆடைகளை வழங்கினா். துணைத் தலைவா் வால்டா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT