முகப்பு
கன்னியாகுமரி

நம்பிமலை மெளனகுருசுவாமி கோயிலில் நாளை சித்திரைப் பெளா்ணமி விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:48 PM
பகிர்:

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) சித்திரைப் பெளா்ணமி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு, கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாம ஜெபம், 9.30-க்கு தியானம், 10 மணிக்கு பக்திப் பாடல்கள், 10.15 மணிக்கு நிலா பூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

Advertisement

ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயில் அறக்கட்டளைத் தலைவா் பி. சுகதேவன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments